நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
குற்றாலம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் இலஞ்சி வழி பாதையில் இருபுறமும் பழக்கடைகளை வைத்து கொண்டு சிலர் போக்குவரத்திற்கும் பொதுமக்களிக்கும் இடையூறாக இருந்து வந்தனர் இதன் தொடர்ச்சியாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று குற்றாலம் போலீசார் ஆக்கிரமிப்புகளைஅகற்றி வந்தனர்
-
தனியார் வளர்ப்பு யானை போக்குவரத்து அனுமதியில் முறைகேடு – வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரையில் உள்ள தனியார் வளர்ப்பு யானை குஷ்மா . சமீபத்தில் இந்த யானை பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கால்நடை மருத்துவரின் தகுதி சான்றிதழ் வழங்கியதன் அடிப்படையில் முறையே 4, 6, 8, , 11 ஆகிய தேதிகளில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் கடந்த 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் , பால பாக்கிய நகரில் உள்ள அருள்மிகு வீர சக்தி விநாயகர் கோவில் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது . ஆனால் 5-ம் தேதிக்கு எந்த…
-
குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சை என பிடிக்கப்பட்ட நாய்கள் – உணவு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற NGO – வேடிக்கை பார்க்கும் மத்திய , மாநில விலங்குகள் நலவாரியங்கள்
சட்டவிரோதமாக தெருநாய்களை பிடித்து காற்றோட்டம் இல்லாத தகர செட்டில் அடைத்து வைத்து உணவு தண்ணீர் வழங்காததால் பிடிபட்ட நாய்கள் இறந்து தூர்நாற்றம் வீசியதால் பரபரப்பு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை தரம் பிரிக்கும் வளாகம் உள்ளது. இங்கு உள்ள தகர ஷெட்டில் இருந்து அதிக அளவிலான நாய்கள் குரைக்கும் சத்தமும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவலறிந்த அப்பகுதி விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் அவ்விடத்திற்கு சென்றனர். அந்த இடத்தில் ஜீவ…
-
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் (TN – 172 / 2008) 2008 -ம் ஆண்டு 13 நபர்களை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் தொண்டு நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் ஆகும். இதன் தலைவராக மாவட்ட ஆட்சியரும் , துணை தலைவராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் ,செயலாளராக மாவட்ட கால்நடை துறை அதிகாரியும் உள்ளனர் . நிர்வாக…