
குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் அதிவேகமாக இயக்கப்பட்ட கனரக வாகனங்கள் , அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக வந்த கனரக வாகனங்கள் மற்றும் குடிபோதையில் ஒட்டிவந்த கனரக வாகனங்கள் உட்பட 48 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.