திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்களை ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மீன் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நல்ல மீன்களையும் அதிகாரிகள் கெட்டுப்போன மீன் எனக் கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்களை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் சோதனை நடத்துவதை நிறுத்திவிட்டு வெறும் கையுடன் மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி சென்றனர் இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
Read Next
செய்திகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
விமர்சனங்கள்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
4 weeks ago
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
May 15, 2026
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
Related Articles
தீபத் திருவிழா முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை
December 8, 2024
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது
September 5, 2020
மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்…
November 30, 2024
*வடமதுரையில் போலி டாக்டர் கைது*
May 7, 2024
Check Also
Close
-
கிருஷ்ணகிரியில் யானைத் தந்தம் பிடிபட்டதுAugust 9, 2023