திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கருத்தாண்டி பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு வருவதற்காக அவ்வழியாக வந்த குருவித்துறை என்ற ஊரைச் சேர்ந்த இளையராஜா வயது 61. என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கருத்தாண்டிபட்டி அடுத்துள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ராஜேஸ்வரி அரசு பஸ் சக்கரத்துக்குள் விழுந்ததால் தலையில் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்து போனார். இதன் பின்னர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் இளையராஜா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தலை நசுங்கி முன்னாள் சத்துணவு அமைப்பாளர் இறந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?
November 19, 2020
மாபெரும் மாநாடு, எம்எல்ஏ பங்கேற்பு
December 18, 2024
பாக் தூதரகத்தில் கொண்டாட்டம்?
April 24, 2025