செய்திகள்

பைக்கில் சாகசம்: பைக்குகள் பறிமுதல் : காவல்நிலையத்தில் பெற்றோர்கள்

பைக்கில் சாகசம்: பைக்குகள் பறிமுதல் : காவல்நிலையத்தில் பெற்றோர்கள் ….

தூத்துக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது நடவடிக்கை – 4 பைக்குகள் பறிமுதல்.

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு பீச் ரோடு பகுதியில் 4 நபர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், சாகசம் செய்து வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரவிதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நகர காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பதிவை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தூத்துக்குடி பாத்திமாநகர் ஜெயபால் மகன் மார்ஷல் மோசா (19), இந்திராநகர், தாமஸ் மகன் ஸ்நோவின் (19), முனியாசமிபுரம் சிவா மகன் பிரவீன் பழனி (20), மற்றும் மகிழ்ச்சிபுரம், மாரியப்பன் மகன் கனகவேல் (19) ஆகிய 4 பேரும் தெற்கு பீச் ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், சாகசம் செய்தது என்பதும், இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு செயயும் வகையில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதும், பைக்ரேஸ், வீலிங் போன்ற சாகசங்கள் செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button