செய்திகள்

தென்காசியில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி… போலீசார் விசாரணை

 தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் நான்காவது தெருவை  சேர்ந்தவர் உசேன்(40) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில்  புளியங்குடி பகுதியில்  இன்று ஒரு வீட்டில் காங்கிரட் போடுவதற்காக சென்ட்ரிங் அமைத்துக் கொண்டிருந்த பொழுது சென்ட்ரிங் கம்பி திடீரென எதிர்ப்பாரவிதமாக அருகில் உள்ள மின் ஒயரில் பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மின்சாரம் தாக்கி அவர்  கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே  இறந்ததாக கூறப்படுகிறது.

 இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் புளியங்குடி  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த புளியங்குடி காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை கொண்டு வருகின்றனர். மேலும் புளியங்குடி பகுதியில் மின்சாரம் தாக்கி கொத்தனார் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button