கோக்கு மாக்கு

பாதுகாப்பு இல்லாமல் ஆபத்து ஏற்படும் வகையில் டிராக்டரில் கொண்டு செல்லும் மின் கம்பம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் டிராக்டரின் டிரைய்லரில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் திறந்தவாறு மின்கம்பத்தை கொண்டு செல்கின்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே ஆபத்தை உணராமல் இவ்வாறு செல்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button