திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் மூன்று ஏக்கர் நிலம் பொதுமக்களால் வாங்கி தரப்பட்டதாக கூறப்படுகிறது கடந்த பத்து ஆண்டுகளாக அந்த இடத்தில் வேறொரு நபர் தனது பூர்வீக இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார் இந்நிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து திட்டப் பணிகள் தொடங்குவதற்கு நிலத்தை சீர் செய்யும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது அதே வேளையில் இட ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை இடத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர் பெண் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தின் சக்கரத்துக்கு அடியில் படுத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது இதனிடையை அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நிலத்துக்குள் சென்று அரசு நிலத்தை அதிரடியாக மீட்டனர் பணியை தடுத்தவர்கள் வெளியேற்றப்பட்டு நிலம் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது இந்நிலையில் தங்கள் பகுதி பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கி பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து தந்த தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்தனர்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
முன்னாள் முதலமைச்சர் நினைவு தினம்
December 6, 2024
பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.
November 25, 2024
வெள்ள சூழ்ந்த பகுதியில் மூதாட்டியை மீட்டு சிகிச்சை
December 3, 2024
Check Also
Close
-
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.November 22, 2024