இந்திய சினிமாவின் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில் கொடி, பைசன் படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “இன்றிலிருந்து, எனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறேன், இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை, ஒரு காலத்தில், என்னுடையது என்பதை மறந்திருந்த அந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்குகிறேன்” என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் மீண்டும் என்னிடம் திரும்பி வருகிறேன், உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை அன்பால் நிரப்பியதற்கும் நன்றி” என்றும் தெரிவித்துள்ளார். இளம் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நடிகை அனுபமா, காதலில் பிரிவு ஏற்பட்டதை அடுத்து இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





