
பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 47 வயது நபரின் இதயம், அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடுகளுடன் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டு, அப்போது சிகிச்சையில் இருந்த 32 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் இதயம் பொருத்தப்பட்டது. மருத்துவக் குழுவினரின் முயற்சியாலும், உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரின் மனிதநேயத்தாலும் ஒரு இளைஞருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.