
காங்கிரசை ‘யூஸ் அண்ட் த்ரோ’ செய்வது போல் தவெகவும் பயன்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும், தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சட்டமன்றத்தில் தவெகவினர் அடிப்படை நாகரிகம் இல்லாமல் செயல்படுவதாக குற்றம்சாட்டிய தினகரன், இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருநாள் தவெக ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் என்றும் கூறினார்


