கோக்கு மாக்கு

பேரூர் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பயன்படுத்தபடாத கிணறு ஒன்று உள்ளது.அங்கிருந்து துர்நாற்றம் வருவதை கண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்கபட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்த இறந்தாரா?கொலை செய்யபட்டு வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் இது நிகழ்ந்து உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button