கோக்கு மாக்கு

தாலி மெட்டியை கழட்டி குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த முத்துலெட்சுமி என்ற திருமணமாகி 4 மாதமான பெண்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரது மனைவி முத்துலட்சுமி இவர் பட்டம் முடித்து விட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார்.

இன்றைய தினம் நீட் தேர்வு எழுத நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். நீட் தேர்வு எழுத செல்லும் போது கழுத்தில் தங்க நகைகள் அணிந்து செல்ல தடை இருப்பதால் வேறு வழியின்றி கழுத்தில் அணிந்திருந்த தாலியை செயினை கழட்டியதோடு காலில் அணிந்திருந்த மெட்டியையும் கழட்டிவிட்டு தேர்வு எழுத சென்றார்.


இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button