கோக்கு மாக்கு

கொரோனாவால் வேலை இழந்து கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து சொந்த மாநிலம் சொந்த மாவட்டங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து இருந்து குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதனால் சில நிறுவனங்கள் தொழிலாளர்கள் பணிக்கு மீண்டு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் வேலை செய்து தொழிலாளர்கள் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலையில் புலம்பி வருகின்றனர். மேலும் குடும்பத்திற்கு போதுமான பணவசதி இல்லாத காரணத்தினால் பிள்ளைகளுக்கு பால் பாக்கெட் வாங்குவதற்காக கஷ்டப்பட்டு வந்தனர். நிலை எப்போது மாறும் என்ற கஷ்டத்தில் இருந்தனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் ராஜாவாக வலம் வந்த தொழிலாளர்கள் தற்போது கிடைக்கிற வருமானம் போதும் என்ற நிலையில் இருந்தனர். தற்போது கட்டிடப் பணிகளுக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button