க்ரைம்செய்திகள்

நீரில் மூழ்கி பள்ளி சிறுமி பலி !

ச.ராஜேஷ்
நாகை மாவட்டம்

நாகை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிழப்பு

நாகப்பட்டினம் நாகூரை அடுத்த தெத்தி சிவசக்தி நகரில் வசித்து வருபவர் மாதவன். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 14) நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார் பள்ளி முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது, அருகில் உள்ள குளத்தில் கால் கழுவுவதற்காக இறங்கி உள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button