திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்களை ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மீன் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நல்ல மீன்களையும் அதிகாரிகள் கெட்டுப்போன மீன் எனக் கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்களை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் சோதனை நடத்துவதை நிறுத்திவிட்டு வெறும் கையுடன் மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி சென்றனர் இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
Read Next
5 days ago
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
6 days ago
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
1 week ago
முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு
3 weeks ago
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
September 25, 2025
தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
Related Articles
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம் எல் ஏ
December 18, 2024
தாலி மெட்டியை கழட்டி குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த முத்துலெட்சுமி என்ற திருமணமாகி 4 மாதமான பெண்
September 13, 2020