கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ராமநதி அணை மூலம் பாசனம் பெறும் பரந்தாமன்குளம் மற்றும் நைனா குளம் ஆகிய இரு குளங்கள் உள்ளது. இந்த இரு குளங்களின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தற்போது தொடர் மழை காரணமாக பரந்தாமன் மற்றும் நைனாகுளம் நிரம்பி அதனுடைய குளக்கரைகள் உடைந்தன. இதனால் பொட்டல் புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.இது பற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயி அணைக்கரை செண்டு கூறுகையில்தற்போது இந்த பகுதியில் நான் 10 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். தொடர் மழை காரணமாக குளக்கரைகள் உடைந்து நெல் பயிர்கள் அழுகின ஒரு ஏக்கர் நெல் பயிர் செய்வதற்கு ரூ 25 ஆயிரம் வரை செலவு செய்தேன். தற்போது அனைத்து நெல்பயிரும் சேதமானது எனவே அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் , என்னை போல் பல விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நெல்பயிர்கள் சேதமானது என்றார்.தொடர்ந்து தகவல் அறிந்த பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் நெல் சேதங்களை பார்வையிட்டார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரவிந்தராஜ், மாடசாமி, பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம், முருகேசன், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
பழமை வாய்ந்த வேரோடு சாய்ந்த புளிய மரம்
December 2, 2024
சாத்தனூர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு
December 2, 2024
பழனி அருகே தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
October 15, 2024
மதுரையில் பயங்கரம் ஒருவர் கொலை
August 26, 2020