கோக்கு மாக்கு
Trending

கடமான் கறி சமைத்தவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கடமான் கறியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேரை மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர்.

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த சிலர் மான் ஒன்றை வேட்டையாடி அதனை சமைப்பதற்காக தயார் செய்துள்ளனர். மேலும், அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். த

இந்த புகைப்படம் வைரலான நிலையில், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி மற்றும் சமைத்த மான் இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார், ராஜேஷ் கண்ணன், அஜித், சிவராமன், ராமகிருஷ்ணன், பிரவீன் ஆகிய ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், டிராக்டர் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு வனம் மற்றும் வன உயிரின குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button