தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர்.இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணமாகாததால் இவரது உறவினர்கள் தீவிரமாக பெண் தேடி வந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட் தி தமிழ் வே’ என்ற இன்டர்நெட் செயலி மூலம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30) என்பவர் பழக்கமானார். பின்னர் இவர்கள் இருவரும் பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மணப்பெண்ணுக்கு தேவையான நகை, புடவை அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். வாலிபருடன் 3 மாதம் குடும்பம் நடத்தி கொண்டிருந்த சந்தியா கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது ஆதார் அட்டையை சந்தேகத்தின் பேரில் பார்த்தபோது கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் சந்தியாவிடம் விசாரணை செய்தபோது கோபமடைந்த சந்தியா,.வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை என மிரட்டி உள்ளார். இதனால் உஷாரான வாலிபர், பெண்ணிடம் சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் என சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது சந்தியாவின் திருமண பட்டியலில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து சந்தியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான தொழிலதிபர்கள் இவருடன் திருமணம் செய்து நகை பணத்தை இழந்து இருப்பதும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
தடை செய்யபட்ட குட்கா பான் புகையிலை தடையில்லாமல் கிடைக்கிறது!
August 24, 2022