
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த லக்கையன் கோட்டையை சேர்ந்த ஆனந்த்(எ) ஆனந்தராஜ்(41) பொள்ளாச்சியை சேர்ந்த பட்டையா (எ)பட்டத்தரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்