

மாவட்டம், திண்டுக்கல் வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டகாமன்பட்டி காமாட்சியம்மன் கோவில் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 1) சிவச்சந்திரன் (48), த/பெ. வீரணன், மூலக்கடை, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் மற்றும் 2) மனோஜ் (36), த/பெ. அய்யர், சக்கரைப்பட்டி, பெரியகுளம், தேனி மாவட்டம் ஆகிய இருவரும் கடந்த 07.08.2026 அன்று கைது செய்யப்பட்டனர்.
மேற்படி எதிரிகளிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் ரூ.30,000/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவர் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி எதிரிகளின் தொடர்ச்சியான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதும், குறிப்பாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதைத் தடுப்பதும், போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தின் மூலம் ஏற்படக்கூடிய சமூக விரோத செயல்களை ஒடுக்கும் பொருட்டு எதிரிகள் இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் பரிந்துரையின் பேரில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா மூர்த்தி அவர்களின் உத்தரவின்படி, எதிரிகள் இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தக்க வழிக்காவல் மூலம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.