செய்திகள்

ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் சென்ற ஒரு ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவ குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை சாலையில் வீசிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொள்வதாகக் கூறி பலர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் குழந்தையை கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு டாக்டர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button