க்ரைம்

கரூர் கேங்கிற்கு எதிரான சாட்சிகளை திரட்டி வருகிறோம் – அமைச்சர் விக்னேஷ்

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங்கிற்கு எதிரான  சாட்சிகளை  திரட்டி வருகிறோம், நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்  விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர், கடந்த ஆண்டு  நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டுகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக  நடவடிக்கை எடுக்கப்பட்ட  சிலருக்கு மீண்டும் பணி  வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆட்சியில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யுமாறு கூறியதே திமுகதான். இதையடுத்து, ரூ.5 கூடுதலாக வாங்கியவர்களிடம் ரூ.10 கூடுதலாக வாங்குமாறு கூறியதும் அவர்கள் தான் என்று சட்டப்பேரவையிலேயே  தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல்  விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஒரு மாவட்டத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை  செய்ததற்கு கடை ஊழியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாரையும் காப்பாற்றுவது அரசின் நோக்கம் அல்ல என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங் குறித்து கடந்த காலங்களில்  இதே துறையின் அமைச்சரை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும், அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முதலமைச்சர் படித்துள்ளதாகவும் அவர் கூறினார். பின்னர், அதற்கான முயற்சிகளும், சாட்சிகளை திரட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என  அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button