அரசியல்சுற்றுலாசெய்திகள்விமர்சனங்கள்

கடும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது கொடைக்கானல் – பாதியில் திரும்பும் சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்குலட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம் .

இந்நிலையில் தற்போது தற்போது கோடைகால சீசன் என்பதாலும் தொடர் விடுமுறையின் காரணமாகவும் இன்று போக்குவரத்து நெரிசலில் கொடைக்கானல் ஸ்ம்பித்துள்ளது

குறிப்பாக பெருமாள் மலையிலிருந்து ஏரி சாலை நாயுடுபுரம் மூஞ்சிக்கல் பகுதி பூம்பாறை மன்னவனூர் வாகனங்கள் மணி கணக்கில் நின்று செல்லும் தருவாயில் இருக்கின்றன

இதனால் சுற்றுலாப் பயணிகள் பல பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் மேலும் பலர் சுற்றுலா செல்லாமலேயே பாதியில் வீடு திரும்பும் அவல நிலை தற்போது கொடைக்கானலில் ஏற்பட்டுள்ளது

இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button