
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும் ஆபாசமாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால், தகவல் அறிந்து அங்கு வந்த திமுகவினர் போலீசாரை முற்றுகையிட்டனர். மேலும், இதன் காரணமாக போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் திமுக வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யபட்டார்.

