செங்குன்றம் அடுத்த காவாங்கரை கே.எஸ் நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு அதில்’ ராட்சத கழிவு நீர் தொட்டி புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது-அதன்படி ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத கழிவு நீர் தொட்டி தூக்கி பள்ளத்தில் வைக்கும் போது எதிர்பாராத விதமாக ஜேசிபி இயந்திரத்தின் சாம்டி எனப்படும் பளு தூக்கும் பகுதி உடைந்து
வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் என்பவரது மூன்று வயது மகனான ஷருக்ஈஸ்வரன் மீது விழுந்ததில் சிறுவனுக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள நிலையில் சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
