க்ரைம்
Trending

காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியிடம் ரூ.15 லட்சம் நகை, பணம் மோசடியில் ஈடுபட்டுதலைமறைவான தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பேட்டை கண்டிகை ஊராட்சி ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெய் கிருஷ்ணா(25). தவெக பிரமுகரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரது வீட்டிலிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான சுமார் 8 சவரன் நகை மற்றும் பணம் எடுத்து சென்று சிறுமி ஜெய்கிருஷ்ணாவிடம் கொடுத்துள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஜெய்கிருஷ்ணா கூறியதால் நகைகள் எடுத்துச் சென்று கொடுத்ததாக தெரிவித்தார். காதல் என்ற பெயரில் சிறுமியை நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button