க்ரைம்

​கர்நாடகா : ​ வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

​கர்நாடக மாநிலம் ஹோலேமுரதட்டி வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலைக் கண்டு சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல் வனத்துறை ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிராக வனத்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் வனத்துறை ஊழியர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.​ துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்த செய்தி பரவியதும், அப்பகுதி மக்கள் ஹனூரில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ராமாபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button