செய்திகள்

வேளாங்கண்ணியில் திருப்பலி : கல்லறை திருநாள்…

வேளாங்கண்ணியில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு  சிறப்பு திருப்பலி நடைபெற்றதுஇறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாக கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கப்பிடிக்கபடுவது வழக்கம். அதன்படி இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது.இதில் கிறிஸ்துவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர் அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்றவேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா  பேராலயத்தில் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள்கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து வேளாங்கன்னியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரம் பேர் கிழக்குகடற்கரைசாலை ஆர்ச் அருகில் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் உள்ளது. அங்கு வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button