திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்களை ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மீன் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நல்ல மீன்களையும் அதிகாரிகள் கெட்டுப்போன மீன் எனக் கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்களை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் சோதனை நடத்துவதை நிறுத்திவிட்டு வெறும் கையுடன் மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி சென்றனர் இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
December 22, 2024
இந்தியன் வங்கி இடமாற்றம் – புதிய கட்டிடம் திறப்பு
November 26, 2024
மினி சரக்கு வாகனம் மோதி விபத்து
September 16, 2020
அன்னதானம் வழங்க அனுமதி டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி
December 6, 2024
Check Also
Close
-
100 நாள் வேலை – நடப்பது என்ன ???April 3, 2025