க்ரைம்
Trending

திமுக வட்ட துணைச் செயலாளருக்கு சரமாரி வெட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி போலீஸ் விசாரணை!

சென்னை ஜூலை 13, தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திமுக வட்ட துணைச் செயலாளராக உள்ளார் இவருக்கு மனைவி மற்றும் வீரப்பிள்ளைகள் உள்ளனர் இந்நிலையில் இன்று வீட்டின் அருகே நண்பர் புயல் கணேசன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர் இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் புயல் கணேசன் இவரை வெட்டும்போது சாதாரணமாக நின்று கொண்டு உள்ளார் சிசிடிவி காட்சியில் எந்தவித பதட்டமும் இல்லாமல் புயல் கணேசன் நிற்பதால் புயல் கணேசன் முன்விரோதம் காரணமாக ஆட்கள் மூலம் வந்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திமுக வட்ட துணைச் செயலாளர் ராஜா சிகிச்சை பெற்று வருகிறார் திமுக வட்டத் துணைச் செயலாளர் வெட்டியது ஆர் கே நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button