க்ரைம்
Trending

அர்ஜென்டினா இங்கிலாந்து அரையிறுதிப்போட்டியினை மெகா ஸ்கிரீனில் ஆரவாரத்துடன் கண்டுகளித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் .

48 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பைக்கான கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும்,கால்பந்தாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் மெகா LED ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்திலேயே அமைக்கப்பட்டிருந்த இந்த மெகா ஸ்கிரீனில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியினை திண்டுக்கல் பகுதியினை சார்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பெரும் திரளாக கண்டுகளித்தனர். போட்டியின் நடுவே கோல்கள் அடிக்கப்பட்டபோது மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஆடிப்பாடி விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்த கால்பந்து போட்டிக்கானஅனைத்து ஏற்பாடுகளையும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் செய்திருந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button