க்ரைம்
Trending

விளையாட்டு வீரர்களின் உடல் நலன் கருதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.இதில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.

தமிழ்நாடு எலும்பியல் சங்கம், திண்டுக்கல் மாவட்ட எலும்பியல் சங்கம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் வீரர் வீராங்கனைகளின் உடல் நலன் கருதி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளில் இருந்து தங்களது உடலை விளையாடும் போது எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் வீரர்களுக்கு 7 கிலோமீட்டர் தூரமும் வீராங்கனைகளுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் போட்டி ஆனது நடைபெற்றது இந்த போட்டியில் வீரர் வீராங்கனைகள் திண்டுக்கல் எம் எஸ் பி சோலை நாடார் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கி ரவுண்ட் ரோடு புதூர் பேருந்து நிலையம் பெரிய கடை வீதி வெள்ளை விநாயகர் கோவில் கிழக்கு ரத வீதி பழனிசாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் எம் எஸ் பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தனர் இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் பரிசு பெறும் வீரர் , வீராங்கனைகளுக்கு 10,000ரூபாயும் இரண்டாவது இடம் பிடிக்கும் வீரருக்கு 7000 ரூபாயும் மூன்றாவது இடம் பிடிக்கும் வீரருக்கு 5000 ஆயிரம் ரூபாயும் முதலில் வரக்கூடிய 10 வீரர்களுக்கு தலா 1000 பரிசுகள் சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button