
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்த சரவணன் காயாமொழி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த போலீசார் சரவணனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் இசக்கிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.