செய்திகள்

7வது நாளாக தொடரும் நீட் போராட்டம்: போராளி ரவி மயங்கி மருத்துவமனையில் அனுமதி

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் மணிரத்தினத்துடன் தனசேகர், ஜீவா, புளியந்தோப்பு மோகன், ரவி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அமைச்சர்கள் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டபோது, அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அல்லது பொது இடத்தில் அமைதிப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும் வரை நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போராட்டக் களத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூக்குக் கயிறுகள் தொங்கவிடப்பட்டு, மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் இருந்த போராளி ரவி உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button