சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் மணிரத்தினத்துடன் தனசேகர், ஜீவா, புளியந்தோப்பு மோகன், ரவி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அமைச்சர்கள் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டபோது, அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அல்லது பொது இடத்தில் அமைதிப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும் வரை நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போராட்டக் களத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூக்குக் கயிறுகள் தொங்கவிடப்பட்டு, மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் இருந்த போராளி ரவி உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read Next
5 hours ago
சங்கரன்கோவிலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி, 3 பெண்கள் படுகாயம்!
6 hours ago
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 3 பள்ளி மாணவர்கள் மீட்பு
21 hours ago
ஆன்லைனில் மது விற்பனை விவகாரம் -விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர்
1 day ago
புகை பிடித்ததாக புகார்: ஆசிரியர்கள் தாக்கியதாக கூறி 3 மாணவிகள் தற்கொலை முயற்சி
2 days ago
பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்
2 days ago
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
3 days ago
ஒற்றை யானை தாக்கி கோவில் பூசாரி பலி – கிராம மக்கள் சாலை மறியல்
3 days ago
தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர்
3 days ago
விபத்தில் முடிந்தது சாகச பயணம்
4 days ago
காட்டு தீயை கட்டுப்படுத்த வந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி
Related Articles
Check Also
Close


