
திண்டுக்கல் தருமத்துப் பட்டி அருகே வன உயிரின பாகங்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வன அதிகாரி நாகசதீஷ் கிடிஜாலா IFS அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் D.கோம்பை பகுதியில் உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் கன்னிவாடி வனச்சரகத்தினர் நடத்திய அதிரடி சோதனையில் மான்கொம்பு , எறும்பு தின்னி ஓடுகள், சந்தன கருங்காலி மரத்துண்டுகள் , அவுட்டு காய்கள் (நாட்டுவெடிகுண்டுகள் ) மற்றும் வேட்டையாட பயன்படுத்திய ஏர்கன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையில் சட்ட விரோதமாக வன உயிரின பாகங்களை வைத்திருந்த தருமத்துப்பட்டி, D.கோம்பை பகுதியை சேர்ந்த ராமராஜன்(37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
