
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயனங்கள், பாம் ஆயில், வனஸ்பதி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 25.5 டன் போலி நெய்யை எச்-ஃபாஸ்ட் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை செய்ததில் பசு நெய், நாட்டுநெய், என்ற பெயரில் ஹோட்டல்கள், இனிப்பகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, போலி நெய் தயாரிப்பவர்கள் மீது குண்டாஸ் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் எச்சரித்துள்ளார்.

