செய்திகள்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் ரைட்டர் மீது கார் மெக்கானிக் புகார்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் அபதாரம் செலுத்தினால் வாகனத்தை பெற்று கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, சக்திவேல் ரூ. 10000 போலீசாரிடம் வழங்கியுள்ளார். இருப்பினும் போலீசார் அந்த வாகனத்தின் மீது ரூ.15 ஆயிரம் அபராதம் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மேலும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வழக்கை முடித்து தருவதாக செல்வகுமார் தெரிவித்ததாகவும் சக்திவேல் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தொடர்பாகவும் முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button