சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் அபதாரம் செலுத்தினால் வாகனத்தை பெற்று கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, சக்திவேல் ரூ. 10000 போலீசாரிடம் வழங்கியுள்ளார். இருப்பினும் போலீசார் அந்த வாகனத்தின் மீது ரூ.15 ஆயிரம் அபராதம் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மேலும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வழக்கை முடித்து தருவதாக செல்வகுமார் தெரிவித்ததாகவும் சக்திவேல் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தொடர்பாகவும் முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார்.
Read Next
4 hours ago
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
4 hours ago
தூத்துக்குடி : சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம் செய்வதால் ஆட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
4 hours ago
பூந்தமல்லி : அரசு உதவி பெறும் பள்ளியில் உணவில் பல்லி இருந்ததாக புகார் – 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
4 hours ago
திருவொற்றியூர் : 2 டன் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் குறித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்
6 hours ago
தமிழக காவலர்களின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள்
6 hours ago
100 நாட்கள் ஆகியும் கேப்டன் சமாதிக்கு ஏன் செல்லவில்லை? – விஜயபிரபாகரன்
7 hours ago
பரந்தூர் விமான நிலையம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு
8 hours ago
சேலம் : மயிலிறகு மாலை அணிவித்த தவெக எம்.எல்.ஏ. லட்சுமணன் புதிய சர்ச்சை
10 hours ago
தூத்துக்குடி : ஓணம் பண்டிகையால் மீன்களின் விலை சரிவு 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம்
1 day ago
கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டேன் – உதயநிதி ஸ்டாலின்
Related Articles
Check Also
Close


