
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை ரூ.99.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சி.என்.ஜி. எரிவாயுவின் விலை ஒரு கிலோ ரூ.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, எரிபொருள் விலை உயர்வால் வாகனப் பயன்பாடு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




