அரசியல்

கோவில் பூசாரிகளுக்கு நலத்தி்ட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையொட்டி திருக்கோவில்களில் மாத சம்பளம்மின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்,பூசாரிகள்ளுக்கு ரூபாய் 4000 உதவிதொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட்ட 15 வகையான மளிகை பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி .கீதாஜீவன் வழங்கினர்.

கொரோனா நோய் பெருந்தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருக்கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர் களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை ரூ. 4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி

திருக்கோயிலில் உள்ள 106 அர்ச்சகர் மற்றும் ஊதியமில்லா பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம்

தொகை ரூ 4000 மற்றும் நிவாரண பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி .கீதாஜீவன் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனையர் அன்பு மணி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா,உதவி ஆட்சியர் ( பொ) செல்வ நாயகம், வட்டாட்சியர் ஜஸ்டின், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் பணியாளர்கள் சங்க தலைவர் செல்வம் பட்டர், மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் மாரி ராஜா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button