திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் மூன்று ஏக்கர் நிலம் பொதுமக்களால் வாங்கி தரப்பட்டதாக கூறப்படுகிறது கடந்த பத்து ஆண்டுகளாக அந்த இடத்தில் வேறொரு நபர் தனது பூர்வீக இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார் இந்நிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து திட்டப் பணிகள் தொடங்குவதற்கு நிலத்தை சீர் செய்யும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது அதே வேளையில் இட ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை இடத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர் பெண் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தின் சக்கரத்துக்கு அடியில் படுத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது இதனிடையை அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நிலத்துக்குள் சென்று அரசு நிலத்தை அதிரடியாக மீட்டனர் பணியை தடுத்தவர்கள் வெளியேற்றப்பட்டு நிலம் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது இந்நிலையில் தங்கள் பகுதி பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கி பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து தந்த தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்தனர்
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
January 18, 2026
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மருத்துவர் ஆய்வு
December 5, 2024
அவன புடிச்சு உள்ள போடுங்க சார்
September 13, 2023
Check Also
Close
-
துணை முதல்வர் பிறந்தநாள் விழாNovember 29, 2024