
நீட் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, நந்தன் நீலகேணி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு புகாரில், இளைஞர்கள் மற்றும் சி.ஜே.பி-யினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் மோடி இது குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தொழில்நுட்ப நிபுணரும், இன்போசிஸ் இணை நிறுவனருமான நந்தன் நீலகேணி தலைமையில் நீட் தேர்வு சீர்திருத்தங்களை ஆய்வு செய்வதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த குழு விரைவில் நீட் தேர்வு சீர்திருத்தம் குறித்த அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த குற்றவாளிகள் சிறையில் இருப்பதாகவும், மாணவர்கள் எதிர்காலத்திற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்த பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, வினாத்தாள் கசிவை தடுக்க நாடாளுமன்றத்தில் கடுமையான தண்டனைகள் அடங்கிய, சட்டமசோதா கொண்டுவரப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.


