செய்திகள்

சூர்யாவிற்கு நன்றி : பழங்குடி மக்கள் பாம்புகளுடன் நூதன போராட்டம் !!!

சூர்யாவிற்கு நன்றி : பழங்குடி மக்கள் பாம்புகளுடன் நூதன போராட்டம் !!!

ஜெய்பீம் பட விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பழங்குடி மக்கள் நன்றி தெரிவித்து பாம்பு, எலிகளுடன் ஆதரவு தெரிவித்தனர்.

சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்பீம். ஆனால், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் கடந்த 3 வாரங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்ப்பு, ஆதரவு, மிரட்டல், வழக்குப்பதிவு, கடிதம் என பரபரப்பாக காணப்பட்டது.

பழங்குடி மக்கள் பிரச்னை, அதிகாரம் இல்லாதவர்கள் பாதிக்கப்படும் விதம் உள்ளிட்டவற்றை பேசிய, ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி கலச காலண்டர் காட்சி தான் இதற்கு காரணம். இந்த நிலையில், இயக்குனர் ஞானவேல் ராஜா விளக்கம் அனைத்துக்கும் விளக்கம் அளித்திருந்தார். நடந்த பிரச்னைகள் அனைத்திற்கும் தான்தான் பொறுப்பு. இது தொடர்பாக சூர்யாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது துரதிருஷ்டவசமானது.

ஜெய்பீம் படத்தின் ஆக்கத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், அப்படி யாரேனும் படத்தால் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஞானவேல் கூறியிருந்தார்.

இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து ஜெய்பீம் சர்ச்சைகள் அடங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், படத்தை தந்தமைக்காக சூர்யாவுக்கும், பழங்குடி மக்கள் நலனுக்காக திட்டங்களை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பழங்குடி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மதுரையில் நன்றி தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காட்டு நாயக்க சமூக மக்கள், கழுத்தில் பாம்பையும், கையில் எலியையும் வைத்துக் கொண்டு ஸ்டாலினையும், சூர்யாவையும் வாழ்த்திப் பாராட்டினர். அப்போது பலரும் முதலைமச்சர், நடிகர் சூர்யாவை வாழ்த்தி பதாகைகளை ஏந்தி ஆதரவு போராட்டம் நடத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button