கோக்கு மாக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களை மரத்தில் கட்டி போராட்டம்

ஆணையப்பபுரம் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் ஊரில் உள்ள ஆலமரத்தில் காலி குடங்களை கட்டி தூக்கில் தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு,

திருநெல்வேலி மாவட்டம் பருத்திப்பாடு பஞ்சாயத்துக்குட்பட்ட ஆணையப்பபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் விவசாயத்தையே முழுமையாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் விவசாயம் சரிவர நடைபெறவில்லை. இந்நிலையில் ஆணைய பாப்பா கிராமத்திற்கு கடந்த மூன்று மாதமாக குடிநீர் மற்றும் போர் வாட்டர் முழுவதுமாக வராமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் அன்றாட வேலைக்கு செல்லவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும்  இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு கொடுத்தும், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லையென கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் 100 க்கும் மேற்பட்ட காலிக் குடங்களை கட்டி தூக்கில் தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கிராம மக்கள் கூறுகையில் இந்த போராட்டத்திற்கு பின்பும்  தண்ணீர் உடனடியாக கொடுக்க முன் வரவில்லை என்றால் நாங்களும் தூக்கில் தொங்குவதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button