புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பல்லவியை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, 10 நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், கால்வாய் பணி காரணமாக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள மின் ஒயர்களில் பாதிப்பு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, கழிவுநீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.


