அரசியல்

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம்

திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, கட்சி தலைமை மீது தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், எதிர்காலத்தில் எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தோப்பு வெங்கடாஜலம் தெரிவித்தார். இதையடுத்து, 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய தோப்பு வெங்கடாஜலம், பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, 2021ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button