க்ரைம்
Trending

விவசாய நிலத்தில் கிராவல் மண் அள்ளி கடத்திய கும்பல்

திண்டுக்கல், நிலக்கோட்டை, அருகே சக்கையநாயக்கனூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் கிராவல் மண் அள்ளியதையடுத்து, அப்பகுதி மக்கள் மண் எடுக்க பயன்படுத்திய டிப்பர் லாரி, ஹிட்டாச்சி இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களை சிறை பிடித்தனர்.

அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கிராவல் மண் அள்ளிய நில உரிமையாளரிடம் முறையாக அரசு அனுமதி பெற்ற பிறகே மண் அல்ல வேண்டும் என போலீசார் உத்தரவிட்டு வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இதனை அடுத்து வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button