
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சுந்தரமகாலிங்க மூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பூக்குழியில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பக்தர்கள் நிலைதடுமாறி தீக்குண்டத்திற்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் லேசான தீக்காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.



