திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. அந்த பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிகள் புகை பிடித்ததாக தகவல் கூறப்படுகிறது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகளை தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்துள்ளார். இது மட்டுமில்லாமல் மாணவியர்களின் பெற்றோர்களை தலைமை ஆசிரியர் வரவழைத்து மாணவியர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள், ஆகையால் நீங்கள் மாற்றுச்சான்றிதழ்களை வாங்கி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவியர்களை தாக்கியதாகவும், 5 மாணவியர்களை தனி அறையில் வைத்து அடித்து, தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை தனது தந்தை பயன்படுத்திய BP மாத்திரைகள் கொண்டு வந்து 2 தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி ஒருவர் மட்டும் உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
11 hours ago
இரவு நேர பேருந்து பணியில் ஈடுபட்டிற்கும் ஓட்டுனர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய போக்குவரத்து போலீசார்
12 hours ago
சங்கரன்கோவில் அருகே கோரவிபத்தில் இருவர் பலி – 10 பேர் படுகாயம்
1 day ago
கிருஷ்ணகிரி : 40 ஏக்கர் நிலத்தில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி – ஆட்சியர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு
1 day ago
திண்டுக்கல் : இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு
1 day ago
உதயநிதியிடம் திமுக நிர்வாகி அன்பில் மகேஷ் உதவியாளரை மாற்றக் கோரிக்கை
1 day ago
மது போதையில் இளம்பெண்கள் இருவர் அட்டகாசம்
2 days ago
மத்திய பிரதேசம் : எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து – மது போதையில் ஓட்டிய டிரைவர் கைது
2 days ago
ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் ரைட்டர் மீது கார் மெக்கானிக் புகார்
2 days ago
மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 3 குழந்தைகள் பலி
2 days ago
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
Related Articles
Check Also
Close
-
50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன் – குவியும் பாராட்டுக்கள்April 27, 2024
